15.5.13

உதிரும் இலையாகி


மழையோடு 
மழையாக வேணும்.
மழையாகி
ஊர்சுத்த வேணும் .
இலையினையும்பூவினையும்
முத்தமிட வேணும்.
காற்றோடு
கதை பேசித்
திரிய வேணும்.
சில்லென்று
சிலிர்த்தாடி
மகிழ வேணும்.
அலையேறிக்
கடல் உலவி
மீனோடு
நீந்த வேணும்.
குழந்தை
பேசும்
குலவு மொழியில்
கிளியோடு
கொஞ்ச வேணும்.
உதிரும்
இலையாகி
ஆற்றோடு
போக வேணும்.

No comments: