3.6.16

கனத்து கரித்து வீசுகிறது காற்று .

நீளமான சிறகுகளையுடைய 
அல்பட்ரோஸ் பறவையொன்று 
அழகிய மணி பல்லவத் தீவின் 
தீவ திலகையைப் போல
கடல் வெளியை நோட்டமிட்டபடி
ஏகாந்தமாய் பறந்து கொண்டிருந்தது.
அந்தப் பெரும்பறவையின்
வலிய கருஞ்சாம்பல் சிறகுகள்
மீதேறிய என் வேட்கை மிகுந்த
கண்கள் அருகிலிருந்த காட்டுக்குள்
இரலையைப் போலத் துள்ளிக்
குதித்தோடி ஒரு நீண்ட
ஒற்றைப் பாய்ச்சலில்
இருளுக்குள் புகுந்து மறைந்தது.
அப்போது திசையறியாப் பேரலைகள்
எற்றிக் குதித்து ஆர்த்தெழ
வானத்து மையத்தில்
ஏதுஞ் சலனமற்று
மிதக்கத் தொடங்கியது
ஒரு பெருஞ்சுடர் வடிவம்.
வேட்கை தொலைத்த மனம்
வேட்டைச் செந்நாயாய் மாறி
ஊளையிட கனத்து கரித்து
வீசத் தொடங்கியது காற்று.

- சரவணன். 

No comments: