3.6.16

வல்லூறு செய்வோர்க்கு வல்லூறும் செய்யும் வல்ல மழை.

மச்சக் கருவிழிகள்  
மஞ்சள் கண்களில் 
மருண்டு மின்ன   
குறுவாள் விரல்கள்
பச்சை இளங்கிளை
மிகப் பற்றி நிற்க
குதறுங் கூரலகில்
மழைக் கொடுக்கு
மிடுக்கு காட்டி
வானில் வட்டமிட்டு
வல் ஊறு செய்யும்
வில்லேந்திரனை
வல்லூறு செய்தது
வல்ல மழை.

- சரவணன். 

No comments: