19.4.09

மீறல்...

நீ பாதி நான் பாதி என நகர்ந்த பொழுதின்
சத்தியம் மீறி
பெரும் பொழுதாய் நீண்டு கிடந்தது பகல்.
இலையுதிர்ந்து நிறமிழக்கத் தொடங்கி இருந்தன மரங்கள்
நிறை கிணறுகள் தன் பெயர் தொலைத்து நின்றன
வெடித்துப் பிளந்த நிலங்கள் செடிகளை உண்ணத் தொடங்கின
உயிர்களின் சுவாசப் பைகளில் மட்டுமே மிச்சமிருந்தது காற்று
பொறுப்பது பேதமையென பொங்கியெழுந்த இரவு
பகலின் மீது போர் தொடுத்த வேளையில்
கொட்டத் தொடங்கியது மழை...

No comments: