அது நிகழ்ந்த பொழுது
பூக்களின் வாசனை
எங்கும் நிறைந்திருந்தது
காற்றின் இசைக்கு
இலைகள் பாடிக் கொண்டிருந்தன...
சட்டென்று அது நிகழ்ந்தது.
முகம் மறைத்து
பெண்கள் இடம் நகர்ந்தனர்
இயல்பாய் நடந்தவர்
கலவரத்துடன் விரைந்தனர்
மகிழ்ச்சி வெறுப்பு கோபம் என
ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை
அங்கே விட்டுச் சென்றனர்...
என் உதடுகளை முத்தமிடத் தொடங்கிய மழை
இப்பொழுது முழுவதுமாக
என்னை ஆக்கிரமித்துக்கொண்டது...
No comments:
Post a Comment