27.9.08

ஆனந்த தாண்டவம்...

பச்சை பூத்திருந்த மழைக் காடு

மினு மினுத்த கருப்பு மண்ணில்

ஆடல்வல்லானின் அழகிய காலில்

சிக்குண்ட முயலகனாய்

வண்ண மயிலின் வனப்பு பிடியில்

படையும் நடுங்கும் பாம்பின் நடனம்

விரித்த தோகையின் ஆயிரம் கண்களிலும்

உமையின் உக்கிரம்...

கொண்டல்கள் கூடிய கொற்றவை காட்டில்

அகவும் மயிலின் ஆனந்த தாண்டவம்...

No comments: