20.11.08

காதல் மழை...

பால் வெளியில்
ஒரு வானமும் ஒரு நிலமும்
காதலிக்கத் தொடங்கின...
ஒன்றை ஒன்று
பார்த்துக் கொண்டே இருந்தன...
பெருகிய காதலில்
வானம் வண்ணம் கொண்டது...
நிலமோ பூத்துக் குலுங்கியது...
காலம் இப்படியாக
சென்ற ஒரு வெளியில்
பெரு ஊழியின் சூழ்ச்சியில்
பிரிந்தனர் காதலர்...
பசலை பெருக்கி
நிறம் தொலைத்து
நெடு நாட்கள்
தவித்தது நிலம்..
வண்ணம் தொலைத்து
வாடி நின்றது
வானம்...
பிரிவின் துயரம்
பெரு நோயாய்
வருத்த
நிறம் இழந்த வானம்
நீராய்
நிலம் புகுந்தது...
நீண்ட பிரிவின்
சந்திப்பில்
அணைத்துக் கொண்டனர்
காதலர் இருவரும்...
காதற் பெருக்கில்
நிறம் கொண்டன
நிலமும்...வானமும்...
எங்கும் வண்ணங்கள்...
அங்கு
அவனும் அவளும்
பார்த்துக் கொண்டனர்...
வண்ணமும் வனப்புமாய்
வானமும்
நிலமும்
அண்ணலும் நோக்க
அவளும் நோக்க

காதல் மழை
பெய்யத்தொடங்கியது...
அழகாய் மாறிப் போனது
இவ்வுலகம்...

No comments: