3.6.16

வேலனெழில் அவன் காதலந் தோழி கால் நனைத்துப் பெருகக் காண்.

அனல்
விழியேறிச் சிவக்க 
கனல்
முகமேறித் தெறிக்க   
குழல்
குதித்தாடிப் பறக்க
காந்தள்
மார்பாடி மணக்க
துள்ளும்
வேலொடு வெறியாடி
கொற்றவைச் சுனையில்
புனலாடி
எழுந்து வரும்
வேலனெழில்
வடிவம்
கண்டவர் கடந்தவர்
விழி பருகி வழிய
நதியாகப்
பெருக்கெடுத்து
பொன் செருந்தி சூடிய 
அவன் காதலந் தோழி
கால் நனைத்து
கடலாகிப் 
பெருகக் காண். 

-சரவணன். 

No comments: