நீலம் பூத்துக் கிடந்த
அணங்குடை நெடுவரையில்
பிளிறும் வேழத்தின்
பெருங் குரலெடுத்து
கூட்டங் கூட்டமாய்
நடனமாடித் திரிந்தன
நறவமுறுஞ்சிகள்.
தேவராட்டிகளும்
தேவராளன்களும்
முது மொழியில்
மறை மொழி ஓத
குறிஞ்சிப்பூ சூடி
வெறியேறி வரும்
வேலன் காண
தண்கா அதிர
மின்னிச் சீறி
மழை வேல் ஊன்றி
வந்தன மேகங்கள்
என அகவன் மகள்
கூறக் கேளாய்!
- சரவணன்.
நடனமாடித் திரிந்தன
நறவமுறுஞ்சிகள்.
தேவராட்டிகளும்
தேவராளன்களும்
முது மொழியில்
மறை மொழி ஓத
குறிஞ்சிப்பூ சூடி
வெறியேறி வரும்
வேலன் காண
தண்கா அதிர
மின்னிச் சீறி
மழை வேல் ஊன்றி
வந்தன மேகங்கள்
என அகவன் மகள்
கூறக் கேளாய்!
- சரவணன்.
No comments:
Post a Comment